Home Prayer for Israel

Prayer for Israel

06 Nov 2023

Prayer for Israel Download PDF

இஸ்ரவேலுக்கான ஜெபம்

மகிமையின் ராஜாவாக  உன்னத பீடத்தில் வாசம் செய்கின்ற தேவாதி தேவனுக்கு மகிமை செலுத்துகின்றோம்.

ஐயா தகப்பனே! நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர், எல்லாம் வல்லவர், சர்வத்தையும் ஆட்சி செய்பவர்,  முதலும் முடிவும் நீராக இருக்கின்றீர், இருப்பினும் எங்களுக்காக ஏழைத்தாயின் வயிற்றில் பிறந்து , ஏழைத்தாயின் மகனாக எங்களை இரட்சித்தீர், உமக்கு கோடான கோடி நன்றி.

ஐயா, நாங்கள் ஜெருசலேமுக்காக வேண்டிக்கொள்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள், தேவாதி தேவனை  அறிந்து கொள்ளும்படி, நாங்கள்  துதியின் சத்தத்தை அவர்களுக்காக உம்முடைய பாதத்திலே ஏறெடுக்கின்றோம்.

ஆண்டவரே உம்முடைய செம்மறியின் ஆடையை இஸ்ரவேல் ஜனங்களின் மேல் போடும்படி நாங்கள் மண்டியிட்டு மன்றாடுகின்றோம்.

ஆண்டவரே, நீர் சிந்திய இரத்தத்தையும் , உமது பாடுகளையும் அவர்கள் அறியத்தக்கதாய், ஆவியானது அவர்களுடைய இருதயத்தை ஊடுருவத்தக்கதாய், இப்பொழுதே  அமைதியின் காலங்களை  அவர்கள் அறியத்தக்கதாய்,  இந்த அமைதியின் வழியாகவே அவர்கள் உம்மை  கண்டடைய தக்கதாய் உமது ஆவியை ஊதும்  தகப்பனே.

எவன் ஒருவன் உம்மை தேடுகின்றானோ,  அவனுக்கே மகிழ்ச்சியும் விடுதலையுமான காலங்களாக இருக்கின்றது என்று சொல்லப்பட்ட வார்த்தையின் படி, நாங்கள் உம்மை தேடுகின்றோம். இஸ்ரவேல் ஜனங்களும் உம்மை தேடும்படியாக ஜெபிக்கின்றோம்.

இதோ மனங்களை மாற்றுகின்ற ஆவி இப்பொழுதே அவர்கள் மேலே இறங்கும் படியாக ஜெபிக்கிறோம், யூத மக்களுக்கு மென்மையான இருதயத்தை தந்தருளும்படி மன்றாடுகின்றோம். ஒவ்வொருவரும் உம்மை உணர்ந்து கொள்ளத்தக்கதாய் அவர்களின் முகங்களை திருப்பும் தகப்பனே.

நீரே மெய்யான தேவன்,  உம் வழியாகவே மெய்யான தேவனை  கண்டறிய முடியும்,  பிதா, சுதன், பரிசுத்த ஆவி மூவரும் ஒன்றாய் இருக்கிறீர் என்ற வார்த்தையை அவர்கள் உணரத்தக்கதாய், இப்போது அந்த ஏழு ஆவிகள் இவர்கள் மேல் இறங்கும்படியாக கட்டளையிடும் தகப்பனே.

ஆண்டவரே, அவர்களை சுற்றி இருக்கின்ற காளை மாடும், எருமை மாடும் அவர்களை தாக்காதபடிக்கு, இப்பொழுதே அப்படிப்பட்ட தலைகளை வெட்டும் படியாக மன்றாடுகிறோம் .

உருமாற்றத்தின் ஆவியை  அவர்கள் மேலே ஊதின கிருபைக்கு நன்றி தகப்பனே.

அந்த மக்களுக்காய், நாங்களே எங்களை பலியாக்கத் தக்கதாய் இப்பொழுது ஒவ்வொரு நாளும் அந்த எரிபலியாய் இருக்கின்ற உமக்காய் பலி செலுத்துகின்ற பலியாய் நாங்களே வந்து நிற்கிறோம் தகப்பனே.

இஸ்ரவேல் ஜனத்தின் விடுவிப்புக்காக  உபவாச நாளை எங்களுக்கு அறிவித்த கிருபைக்கு நன்றி, இந்த அடிமைகளின்  உபவாசத்தின் சத்தத்தால் பொல்லாத சாத்தானின் தலைகள் வெட்டப்பட்டு, இஸ்ரவேல் ஜனத்தை ஞானத்தால் நீர்  வழி நடத்தி, பரிசுத்த ஆவியை அவர்கள் மேல் பொழியும் படி மன்றாடுகின்றோம். ஆண்டவரே இந்த உன்னத உபவாச நாளிலே எங்களை அழைத்த கிருபைக்கு நாங்கள் நன்றி செலுத்துகின்றோம்.

இந்த உன்னத  உபவாச நாளை நாங்கள் அனுசரித்து, உம்  பிள்ளைகளுக்காய் ஜெபிக்கின்ற ஜெபத்தை ஏற்று எங்களையும் உம்முடைய  ஜனமாய் ஏற்றுக்கொள்ளும்.

தேவாதி தேவனே, தகுதியற்ற எங்கள் மீது உம்மக்களுக்காய் ஜெபிக்கின்ற ஆவியை தந்த கிருபைக்கு உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

தேவாதி தேவனே, உம்முடைய ஜனங்கள் செய்த பாவத்திற்காய், இதோ ஈனப்பிறவிகளாக இருக்கும் எங்களை அழைத்துக் கொண்டு வந்து, எங்கள் ஜெபங்களை தகுதியுள்ள ஜெபங்களாக மாற்றினீர் உமக்கு மிக்க நன்றி, ஆமென்.

WordPress Lightbox